search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சாவடி பிரசாரம்"

    தேர்தல் விதியை மீறி வாக்குச்சாவடி முன்பு பிரசாரம் செய்த மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக வலியுறுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #Dayanidhimaran
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல், தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 10 மணிக்கு ஓட்டு போட்டார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆட்சி மாற்றத்திற்காக தான் வாக்களித்ததாகவும், அதேபோல் மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



    இதன்மூலம் அவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்பது தெளிவாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதும் தெளிவாகிறது. எனவே, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Dayanidhimaran
    ×